29/Jan/2021 07:18:53
புதுக்கோட்டை: ஈரோடு மாவட்டம், பவானி சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட தொட்டிபாளையம் ஊராட்சி பகுதியில் சாலை மேம்பாடு, ஆழ்துளை கிணறு அமைத்து மின் மோட்டார் பொருத்துதல், கான்கிரீட் தளம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கவிழாவில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பண்ணன் கலந்துகொண்டு ரூ. 1.58 கோடி மதிப்பிலான பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்றுவரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு அதிகாரிகளிடம் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் விஸ்வநாதன், ஒன்றியக்குழு தலைவர் பூங்கோதை வரதராஜ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.