logo
தமிழக முதல்வருக்கு ஈரோடு மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் நன்றி

தமிழக முதல்வருக்கு ஈரோடு மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் நன்றி

13/Jan/2021 12:56:13

ஈரோடு-ஜன: ஏழு உள்பிரிவுகளையும் ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அறிவித்து அதை அமல் படுத்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்த தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு ஈரோடு மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியியின் மாவட்டத்தலைவர் செல்வராஜ் வெளியிட்ட அறிக்கை:  ஈரோடுக்கு தேர்தல் பிரசாரத்துக்காக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி  அண்மையில் வந்தபோது அவரிடம் மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில்  தேவேந்திர குலத்தான், பள்ளன், பண்ணாடி, காலாடி, வாதிரியார், கடையன், குடும்பன் ஆகிய 7 உள்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவிக்க வேண்டுமென தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தின் நிறுவனத்தலைவர் பெ. ஜான்பாண்டியன்  நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தார்.

இந்த கோரிக்கையை ஏற்று  7 உள்பிரிவுகளையும் ஒன்றிணைத்து  தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவிப்பை அறிவிப்பை அண்மையில் தமிழக முதல்வர் வெளியிட்டார். மேலும், இந்த அறிவிப்பை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டுமென  பரிந்துரையும் செய்தார். இதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு  தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் நன்றியையும் பாராட்டுதல்களையும்  தெரிவிப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Top