logo
உதயநிதி ஸ்டாலின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு..

உதயநிதி ஸ்டாலின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு..

12/Jan/2021 07:28:22

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சசிகலா குறித்து அவதூறாக பேசியதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்குரைஞர் ராஜலட்சுமி சென்னை காவல் நிலை ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில்  அண்மையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஒரு கூட்டத்தில் முதல்வர் குறித்தும் சசிகலா குறித்தும் அவதூறாக பேசியுள்ளார். மேலும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான விடியோவையும்  வழக்குரைஞர் ராஜலட்சுமி போலீசாரிடம் கொடுத்தார். அதை ஆய்வு செய்த நிலையில் தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


  

 

Top