logo
தமிழக மக்கள் பாஜகவை ஏற்கமாட்டார்கள்- ப.சிதம்பரம்

தமிழக மக்கள் பாஜகவை ஏற்கமாட்டார்கள்- ப.சிதம்பரம்

03/Jan/2021 09:38:34

தமிழக மக்கள் ஒரு போதும் பாஜகவை ஏற்க மாட்டார்கள் என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் .சிதம்பரம்.

புதுக்கோட்டை மாவட்டம்,கீரமங்கலத்தில் காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாவட்டத் தலைவர் தர்ம. தங்கவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான .சிதம்பரம் பங்கேற்றுப்பேசியது:
அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட போதே திமுக கூட்டணியின் வெற்றி உறுதியாகிவிட்டது. தமிழக மக்கள் ஒருபோதும் பாஜகவை ஏற்க மாட்டார்கள். அதற்கு கடந்த மக்களவைத் தேர்தலே சாட்சி. தேர்தலில் கடுமையான போட்டி இருக்கும் கடைசியில் வெற்றி நமக்கானதாக இருக்கும். நாங்கள் ஹிந்தியை வெறுக்கவில்லை. ஹிந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம். பாஜக ஜனநாயக கட்சி இல்லை. அவர்களின் ஆட்சியில் 98 வயதிலும் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கட்சியினர் 100 நாட்கள் கடுமையாக உழைத்தால் போதும், 200 தொகுதிகளை வென்று தமிழ் புத்தாண்டில் தமிழன்னைக்கு வெற்றியை சமர்ப்பிக்கலாம் என்றார் அவர்.
கூட்டத்தில், தொகுதி பொறுப்பாளர்கள் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்         டி.புஷ்பராஜ், மகாதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


 

Top