24/May/2021 11:10:40
ஈரோடு, மே: ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் 132 வாகனங்கள் மூலம் காய்கறி, மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதேபோல் மாநகர் பகுதியிலும் தொடர்ந்து தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. மாநகர் பகுதியில் பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. காய்கறி, மளிகை கடைகளுக்கும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் தேவையான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையர் மா. இளங்கோவன் கூறியதாவது: மாநகர் பகுதியில் மக்கள்
கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில் வண்டிகள்
மூலம் மக்கள் குடியிருப்புக்கு சென்று காய்கறிகள் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதன்படி கடந்த இரண்டு நாட்களாக வாகனங்களில் விற்பனை
செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு மாநகர் பகுதியில் இன்று 132 வாகனங்கள் மூலம் மக்கள் குடியிருக்கும் பகுதிக்கு சென்று காய்கறி,மளிகை, பழங்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாநகர் பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் இந்த வாகனங்கள் சென்று காய்கறி, மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.
இந்த வாகனங்களுக்குத் தேவையான பாஸ் ஏற்கனவே வழங்கப்பட்டு
உள்ளது. திங்கள்கிழமை காலை வெளி மாவட்டங் களில் இருந்து வந்த
காய்கறி லோடுகள் நேரடியாகஈரோடு பஸ் நிலையத்திற்கு வந்தது. அங்கிருந்து வாகனங்கள் மூலம்
காய்கறிகள், பழங்கள் பிரித்து எடுக்கப்பட்டு குடியிருப்பு
பகுதியில் நேரடியாகச் சென்று விற்பனை செய்யப்பட்டது.
காலை 6 மணி முதல் 12 மணி
வரை வாகனம் மூலம் விற்பனைக்கு அனுமதி
அளிக்கப்பட்டுள்ளது. மார்க்கெட்டில்
விற்கப்படும் விலையிலேயே காய்கறிகள் விற்கப்பட்டு வருகின்றன.
கூடுதல் விலைக்கு விற்கப்படவில்லை.
வாகனங்களில் விற்கப்படும் பொருட்களை வாங்க
வரும் மக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும். இதுபோல்
விற்பனையில் ஈடுபடுவோரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். அதேபோன்று சமூக
இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றார் அவர்.