logo
ஈரோட்டில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது: தங்கநகை ,இருசக்கர வாகனம்,  செல்போன்கள்  பறிமுதல்.

ஈரோட்டில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது: தங்கநகை ,இருசக்கர வாகனம், செல்போன்கள் பறிமுதல்.

26/Dec/2020 08:15:50

ஈரோடு : ஈரோடு மாவட்டம், மாணிக்கம் பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த என்பவர் தனது மனைவி தீப லட்சுமியுடன் கருங்கல்பாளையம் சாய்பாபா கோயிலுக்கு சென்று கொண்டிருந்தார். கருங்கல்பாளையம் கேஎன்கே. சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர் 3.5 பவுன் தாலியை பறித்து அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கருங்கல்பாளையம் காவல்துறையினர் சம்பவ பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி னர். அப்போது செயினை பறித்து சென்றது திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்தி அவரது நண்பர் அருண்குமார் என்பது தெரிய வந்தது. 

இதனையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர்  மேற்கொண்ட விசாரணை யில், நண்பர்களான இருவரும் வெகு விரைவில் பணக்காரர்களாக வேண்டும் என்ற நோக்கத்தில்  திருட்டில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்தனர்.

இவர்களிடம் இருந்து 90ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள்,11 உயர் ரக செல்போன்கள், ரூ. 20 ஆயிரம் ரொக்கம், மடிக்கணினி மற்றும் விலையுயர்ந்த இருசக்கர வாகனம் உள்ளிட்ட வற்றை  காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.  இவர்கள் வேறு ஏதேனும் வழக்குகளில் தொடர்புடையவர்களா என்பது குறித்தும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்

Top