logo
ஈரோடு பத்திரிகையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் காலண்டர்: மாவட்ட எஸ்பி வெளியிட்டார்

ஈரோடு பத்திரிகையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் காலண்டர்: மாவட்ட எஸ்பி வெளியிட்டார்

26/Dec/2020 05:37:13

ஈரோடு, டிச:  ஈரோடு மாவட்ட பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கத்தின் 2021-ஆம் ஆண்டுக்கான  (காலண்டர்) நாள்காட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை வெளியிட்டார்.

ஈரோடு மாவட்ட பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில்  கடந்த 12 ஆண்டுகளாக ஒவ்வொர் ஆண்டும்  மாவட்ட மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல வண்ணக் காலண்டர் வெளியிடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக 13-ஆவது ஆண்டாக  வழக்கம் போல  2021 -ஆம் ஆண்டுக்கான காலண்டர் வெளியிடப்படுகிறது. 

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் ஏஎஸ். ரமேஷ், செயலாளர் எஸ்.பி. ஜீவா தங்கவேல், பொருளாளர் ஆர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை  வகித்தனர்.

இதில், மாவட்ட  காவல்கண்காணிப்பாளர்  தங்கதுரை முன்னிலை ஏற்று, ஈரோடு மாவட்ட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் 2021 -ஆம் ஆண்டுக்கான காலாண்டரை வெளியிட்டார்.   நிகழ்ச்சியில், சங்க துணை தலைவர் சுப்பிரமணி, செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ் நேதாஜி, விஜய் சாய் உள்பட  நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Top