20/Dec/2020 07:55:15
ஈரோடு: ஈரோடு அடுத்த ஆர்.என்.புதூர் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். லாரி ஒட்டுநரான இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளன. இவரது வீட்டிற்கு அருகே காந்திய மக்கள் இயக்கத்தின் ஈரோடு மாவட்ட தலைவர் பெரியசாமி என்பவர் ஜெராக்ஸ் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் மாதேஸ்வரனின் 12 வயதான சிறுமியை பெரியசாமி தனது கடைக்கு அழைத்து சென்று ஆபாச படங்களை காண்பித்து பாலியல் ரீதியான தொந்தரவுகளில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து அச்சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து அவர்கள் ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரையிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவின் அடிப்படையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் உத்தரவின்படி பவானி மகளிர் காவல்துறையினர் நடத்தி வந்த விசாரணையில் காந்திய மக்கள் இயக்கம் ஈரோடு மாவட்ட தலைவர் பெரியசாமி பாலியல் தொந்தரவு செய்தது உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் பெரியசாமியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர்சி. கதிரவன் உத்தரவிட்டார்.