logo
ஆலங்குடி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 5 பவுன் நகை திருட்டு.

ஆலங்குடி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 5 பவுன் நகை திருட்டு.

12/Jun/2021 06:57:33

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

 ஆலங்குடி அருகேயுள்ள குப்பகுடி ஊராட்சி மேலக்கோட்டையைச் சேர்ந்தவர் தனலெட்சுமி(44).இவர், நேற்று முன்தினம் இரவு  வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, மர்மநபர்கள் அவர் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பித்துச்சென்றுள்ளனர். காலையில்  விழித்துப்பார்த்த தனலெட்சுமி நகை திருடப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தனலெட்சுமி அளித்த புகாரைத்தொடர்ந்து, ஆலங்குடி போலீஸார், நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

Top