logo
ஈரோட்டில் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு  சார்பில் ஏழை மக்கள் 250பேருக்கு 5 கிலோ அரிசி வழங்கல்

ஈரோட்டில் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் ஏழை மக்கள் 250பேருக்கு 5 கிலோ அரிசி வழங்கல்

21/Jun/2021 05:37:34

ஈரோடு, ஜூன்: ஈரோட்டில் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் 250பேருக்கு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது.

ஈரோடு மாநகராட்சி 45-ஆவது வார்டுக்கு உள் பட்ட புதுமை காலனியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் ஜெ.சுரேஷ் தலைமையில் நடந்த நிகழ்வில்  ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அப்பகுதியைச் ஏழை மக்கள் 250பேருக்கு தலா 5 கிலோ அரிசி பை வழங்கினார்.

மண்டல தலைவர்கள் விஜயபாஸ்கர், ஜாபர் சாதிக், சிறுபான்மை பிரிவு துணை தலைவர் கே.என்.பாட்ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனா.

இதில், மாவட்ட துணை தலைவர்கள் பாபு என்ற வெங்கடாசலம், அரவிந்தராஜ், விவசாயப் பிரிவு தலைவர் பெரியசாமி, மாநில சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜவஹர் அலி, 4ம் மண்டல தலைவர் சூர்யா சித்திக், எஸ்சி பிரிவு தலைவர் சின்னசாமி, நெசவாளர் அணி தலைவர் மாரிமுத்து, .என்.டி.யு.சி., ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Top