logo
ஆவுடையார்கோவில் ஊராட்சியில் தேங்கிய மழைநீர் வெளியேற்றம்

ஆவுடையார்கோவில் ஊராட்சியில் தேங்கிய மழைநீர் வெளியேற்றம்

05/Dec/2020 08:46:25

அறந்தாங்கி:  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் ஊராட்சி பகுதியில் கனமழையால் தேங்கிய மழை நீரை வெளியேற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

அறந்தாங்கி அருகே ஆவுடையார் கோவில் உள்ளது இந்த ஆவுடையார்கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட பாரதிநகர், காமராஜ் நகர் ஆகிய பகுதிகளில் கடந்த நான்கு தினங்களாக பெய்த அடைமழை காரணமாக மழை நீர் மக்கள் போக்குவரத்து செய்யும் சாலைகள் தெருக்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் புகுந்தது.

இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் ஊராட்சி தலைவர் சந்திரா தலைமையில் உறுப்பினர் சுலக்சனா முன்னிலையில் ஆய்வாளர் மணி, விஏஓ கைலாசநாதன், வேத செல்வம் ஆகியோர் முன்னிலையில் இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் மூலம் வாய்க்கால் சரி செய்து நீர் வெளியேற்றும் பணி முழுவீச்சில்  நடைபெற்று வருகிறது.

Top