logo
காலிங் கராயன் திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

காலிங் கராயன் திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

21/Jan/2021 12:16:06

ஈரோடு ஜன: பவானியில் நடைபெற்ற காளிங்கராயன் தின விழாவையொட்டி  அவரது உருவச் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானியில்  காளிங்கராயன் அணைக்கட்டில்   மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் தலைமையில் காளிங்கராயன் தின விழா  நடைபெற்றது  இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கே. வி. ராமலிங்கம், கே. எஸ். தென்னரசு.

முன்னாள் சிட்கோ தலைவர் சிந்து ரவிச்சந்திரன், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம். முன்னாள் துணைமேயர் கே. சி. பழனிச்சாமி,  தமிழ் மாநில காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் விஜயகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆவின் துணை தலைவர் குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு காலிங்கராயன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து காலிங்கராயன்  வாரிசுதாரர்களை சால்வை அணிவித்து கௌரவித்தனர்

Top