24/Nov/2020 10:14:44
ஈரோடு: ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த சீனாபுரம் அருகே உள்ள வீரணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரகுநாத், தாமோதரன், கிருஷ்ணசாமி, முருகசாமி இவர்கள் நான்கு பேரும் டெக்ஸ்டைல் தொழில் செய்து வருகின்றனர்.
இதில், தாமோதரன், கிருஷ்ணசாமி ஆகிய இருவரும் அண்ணன் தம்பிகள். டெக்ஸ்டைல் தொழில் சம்பந்தமாக நூல் வாங்குவதற்கு கரூர் செல்வது வழக்கம். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் 4 பேரும் பெருந்துறையில் இருந்து ஒரு காரில் கரூருக்கு சென்று கொண்டிருந்தனர்.
கார் கொடுமுடி அருகே உள்ள ஒத்தக்கடை, பள்ளக்காட்டூர் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் சென்ற 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த கொடுமுடி போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விபத்தில் உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே காரில் சென்ற 4 பேர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.