03/Dec/2020 10:57:31
புதுக்கோட்டை: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, புதுக்கோட்டையில் இளைஞர் பெருமன்றம் மாவட்ட செயலாளர் கே ராஜேந்திரன் தலைமையில் மாணவர் பெருமன்றம் செயலாளர் விஜய் மற்றும் இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் மாவட்ட செயலாளர் இந்திராணி முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகி சுந்தர்ராஜன் தொடங்கி வைத்தார் சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாநில செயலாளர் எம் என் இராமச்சந்திரன் ஏஐடியூசி மாவட்ட செயலாளர் வி சிங்கமுத்து ஆர் முருகானந்தம் கண்டன உரை ஆற்றினார்கள் ஏஐடியுசி மாவட்ட தலைவர் கே ஆர் தர்மராஜன் நிறைவுரை ஆற்றினார்
தில்லியில் போராடிக் கொண்டிருக்கிற விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய வேளாண் சட்டங்கள் மூன்றையும் புதிய 2020 மின் மசோதாவையும் அத்தியாவசிய பொருள்கள் திருத்த சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு மாநிலங்களில் இருந்து தில்லி தலைநகரில் விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
மத்திய அரசு போலீசை வைத்து அடக்குமுறை கையாளுகிறது அதை கண்டித்தும் முறையாக நிபந்தனையின்றி மத்திய அரசு விவசாயிகளை அழைத்துப் பேச வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கமிட்டனர்.