logo
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஈரோட்டி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஈரோட்டி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

03/Dec/2020 09:57:57

ஈரோடு: மத்திய அரசின் விவசாயிகளின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், தில்லியில் போராடும் விவசாயிகள் மீது அடக்குமுறைகளை கண்டித்தும், போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே  வியாழக்கிழமை  கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

மாநிலக்குழு உறுப்பினர்   த. ஸ்டாலின் குணசேகரன் தலைமை வகித்தார். 20-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கமிட்டனர். 


Top