logo
திருவரங்குளம் அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில்  உயர்மின்  விளக்கை சீரமைக்க  மக்கள் கோரிக்கை

திருவரங்குளம் அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் உயர்மின் விளக்கை சீரமைக்க மக்கள் கோரிக்கை

07/Jun/2021 11:03:01

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே ஒளிராமல் உள்ள உயர் மின் விளக்கை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவரங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த பல மாதங்களாக எரியாமல் இருந்த உயர்மின் விளக்கு இதனால் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆரம்ப இருளில் மூழ்கியதுஇங்கு பிரசவத்திற்காக தங்கியிருக்கும் கர்ப்பிணி பெண்கள் நோயாளிகள் பச்சிளம் குழந்தைகள் விளக்கு வெளிச்சமின்றி இருளில் தங்கி சிரமப்படும் நிலை நீடித்து வந்தது.

திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன்  சுற்றுச்சூழல் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆரம்ப சுகாதார நிலையத்தை  ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நீண்ட நாட்களாக எரியாமல் உள்ள உயர் கோபுர மின் விளக்கை உடனடியாக எரியச்செய்ய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.

மேலும், ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் பட்டுப்போய் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்ற நடவ டிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்அமைச்சர் நேரில் ஆய்வு செய்து  அதிகாரிகளிடம்  அறிவுறுத்திச் சென்று  ஒரு மாதம் கடந்து விட்டதுஆனால்  இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை பட்டுப்போன மரமும் வெட்கப்படவில்லை. உயர் கோபுர மின் விளக்கும் எரியவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்

Top