03/Dec/2020 09:03:36
ஈரோடு: ஈரோடு, பிச்சாண்டாம்பாளையம் ஊராட்சி வேப்பம்பாளையம் முத்துமஹாலில் நடைபெறும் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 5 மணிக்கு வந்தார்.மேட்டுக்கடை நால்ரோடு பகுதியில் மாநகர் மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான கே.வி. ராமலிங்கம் தலைமையில் கே .எஸ் .தென்னரசு எம்.எல்.ஏ முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் முதலமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.