logo
5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க  கோரி அந்தியூரில் தடையை மீறி மாற்றுத்திறனாளிகள்  சாலை மறியல்

5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி அந்தியூரில் தடையை மீறி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்

03/Dec/2020 02:17:40

ஈரோடு: அரசு துறை தனியார்துறை பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தடையை மீறி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்..

ஈரோடு மாவட்டம், அந்தியூரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து பேரணியாக சென்ற நூற்றுக்கு மேற்பட்டோர் அந்தியூர் முதல் மைசூர் வரை செல்லும் சாலையில் தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 அப்போது மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித் தொகையாக குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் 2003ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்பிய விவரம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பதிவு செய்த மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நான்கு மணி நேர வேலையும் முழு நேர ஊதியம் வழங்க வேண்டும் அரசு தனியார்துறை பணிகளிலும் மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் படி 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் முழக்கங்கள் எழுப்பினர். இதைத்தொடர்ந்து தடையை மீறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.. 

                                                   

        


Top