logo
ஈரோட்டில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக அதிமுக ஆலோசனை கூட்டம்

ஈரோட்டில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக அதிமுக ஆலோசனை கூட்டம்

29/Nov/2020 07:06:17

ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் 2021 -ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைத்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்  ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக  அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு, மாவட்ட அவைத்தலைவர் பி.சி. ராமசாமி தலைமை வகித்தார்.மாநகர் மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவுமான கே.வி. ராமலிங்கம் முன்னிலை வகித்தார். எம்எல்ஏ-க்கள் கே எஸ் தென்னரசு, சிவசுப்பிரமணி ஆகியோர் பேசினர்.

ஒவ்வொரு வார்டு பகுதியில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பூத் கமிட்டி அமைக்க வேண்டும். அதிமுக சாதனை குறித்து பொது மக்களிடம் எடுத்து கூற வேண்டும். டிசம்பர் 10-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதிக்குள் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவச்சிலை, ஈரோடு கட்சி அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலை மற்றும் எம்ஜிஆர் சிலையை திறக்க அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பண்ணன் ஆகியோர் திறந்து வைக்கும் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

 2021 -ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியை அறிவித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்வது. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வது .நிவர் புயலில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், முன்னாள் எம்எல்ஏ-க்கள் பாலகிருஷ்ணன், கிட்டுசாமி, முன்னாள் எம்பி செல்வகுமார சின்னையன், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே சி பழனிச்சாமி,  ஆவின் துணைத் தலைவர் குணசேகரன்,    ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர்கள்  வீரக்குமார், பாவை அருணாச்சலம், மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் நந்தகோபால்,பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், கேசவமூர்த்தி, சூரம்பட்டி ஜெகதீஸ், ஜெயராஜ், முருக சேகர், கோவிந்தராஜ்,   ராமசாமி, தங்கமுத்து பலர் கலந்து கொண்டனர். 

Top