logo
ஈரோட்டில் கார் வாங்க போலி ஆவணங்கள் மூலம் வங்கியில்  ரூ.19 லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவி கைது

ஈரோட்டில் கார் வாங்க போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரூ.19 லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவி கைது

29/Nov/2020 06:57:20

ஈரோடு:  ஈரோட்டில் கார் வாங்குவதற்காக  போலி ஆவணங்கள் கொடுத்து வங்கியை மோசடி செய்ததான புகாரின் பேரில் கணவன் மனைவியை  போலீஸார் கைது செய்தனர். 

ஈரோடு, புதிய ஆசிரியர் காலனி 5-ஆவது வீதியை சேர்ந்தவர் கார்த்திக் (40). இவரது மனைவி ராதிகா (38). இவர் கடந்த மாதம் 13-ஆம் தேதி வில்லரசம்பட்டியில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கினார். இந்த வங்கி மேலாளரை சந்தித்து தான் இந்த வங்கியின் திண்டல் கிளையில் கணக்கு வைத்திருப்பதாகவும் தற்போது புதிதாக மீண்டும்  இங்கு ஒரு கணக்கு தொடங்கியதாகவும் தெரிவித்தார். 

மேலும் தன்னை ஒரு தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியின் மேலாளர் என்று அறிமுகம் செய்து கொண்டார் .மேலும் ராதிகா தனக்கு கார் வாங்க வங்கியில் லோன் வேண்டும் என்று கூறியுள்ளார் அதற்கு வங்கியில் இருந்து சில ஆவணங்களை கேட்டுள்ளனர். அதன்படி ராதிகாவும் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில்  மேலாளராக வேலை பார்ப்பதற்கான அடையாள அட்டை 6 மாத சம்பள கணக்கு விவரம் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு செலுத்தப்பட்ட வருமானவரி விவரம் ஆகியவற்றை கொடுத்தார் மேலும் கோவையில் உள்ள ஒரு ஷோ ரூமிலிருந்து காருக்கான கொட்டேசன் வாங்கி வந்த அந்த வங்கி கிளையில் கொடுத்தார்.

இதையடுத்து அந்த வங்கிக் கிளையில் இருந்து கோவையில் உள்ள கார் ஷோரூமுக்கு கடந்த 17-ஆம் தேதி ரூ 19 லட்சத்திற்கான வரைவோலை வழங்கப்பட்டது.இதையடுத்து வங்கியிலிருந்து கோவையில் உள்ள அந்த கார் ஷோரூமை தொடர்பு கொண்டு காருக்கான ஆர்சி ஒரிஜினல் அனுப்பி வைக்கும்படி கேட்டனர்.

அப்போது கார் ஷோரூமில் இருந்து பேசிய நபர், ராதிகா தனது பெயரில் கார் வாங்க வில்லை அவர் தனது கணவர் கார்த்திக் பெயரில் கார் வாங்கியதாக தெரிவித்துள்ளார். மேலும் தங்களது வங்கியில் கடன் பெற்று விவரம் வாகனத்தின் பதிவின்போது குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து அதிர்ச்சி அடைந்த வாங்கி நிர்வாகத்தினர் வரைவோலையின் நிலை குறித்து ஆய்வு செய்தனர். அப்போது அந்த வரைவோலை பணமாக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும் ராதிகா கொடுத்த ஆவணங்கள் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அவை அனைத்தும் போலியானது என தெரியவந்தது.

இதைப்போல், ராதிகா போலி ஆவணங்கள் கொடுத்து ஏற்கெனவே இரண்டு வங்கிகளில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து வங்கி மேலாளர் பிரியா   ஈரோடு  மாவட்ட எஸ்.பி தங்க துறையிடம் புகார் அளித்தார்.

 இதுகுறித்து விசாரணை நடத்த குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டதையடுத்து  போலீசார் அதிரடி விசாரணை நடத்தி ராதிகா மற்றும் அவரது கணவர் கார்த்திக் ஆகியோரை  நவ.29  கைது செய்தனர் அவர்களிடம் இருந்து 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது பின்னர் அவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Top