logo
கிருமிநாசினி இயந்திரம் வெடித்ததில் பார்வை இழந்த மாநகராட்சி பணியாளர்

கிருமிநாசினி இயந்திரம் வெடித்ததில் பார்வை இழந்த மாநகராட்சி பணியாளர்

20/Nov/2020 05:11:00

மதுரை: மதுரையில் கொரோனா தடுப்பு பணியின்போது கிருமிநாசினி இயந்திரம் வெடித்து சிறியதில் மாநகராட்சி பணியாளர் ஒருவரின் பார்வை பறிபோனது.

மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர், மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கொடிய கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் மாரிமுத்து உள்ளிட்ட ஏராளமான பணியாளர்கள் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், மதுரை மாநகராட்சி பகுதியில், கொடிய கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்கள் வசிக்கும் பகுதிகளில் லைசால் கிருமிநாசினி தெளிக்க, கிருமிநாசினி இயந்திரத்தை மாரிமுத்து இயக்கியுள்ளார்.

அப்போது அந்த இயந்திரம் வெடித்து சிறியது. இதில் மாரிமுத்துவின் முகம் வெந்துபோனது. அத்தோடு கண் பார்வையும் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து, மாநகராட்சி சார்பிலும், காவல் துறை சார்பிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.


 


Top