20/Nov/2020 06:36:25
புதுக்கோட்டை: புதுக்கோட்டைமேலராஜ வீதிலுள்ள தண்டாயுதபாணிசுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி யொட்டி, தண்டாயுதபாணி சுவாமிக்கு பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம்,மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட புனித பொருள்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
மாலையில், தண்டாயுதபாணி சுவாமி சந்தனக்காப்பு வெள்ளிஅங்கி மலர் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் ஏற்பாடுகளை நிர்வாகிகள் மற்றும் பாலு அய்யர் ஆகியோர் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.