logo
கார்த்திகை முதல் நாளில் முருகனுக்கும் ஐயப்பனுக்கும் மாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள்

கார்த்திகை முதல் நாளில் முருகனுக்கும் ஐயப்பனுக்கும் மாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள்

16/Nov/2020 04:02:18

புதுக்கோட்டை சின்னப்ப நகரிலுள்ள ஐயப்பன் கோவில் ,மேலராஜ வீதிலுள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி  திருக்கோவில் சீதாபதி கிருஷ்ண விநாயகர் உள்பட பல்வேறு கோவில்களில் கார்த்திகை முதல்நாளில்  சபரிமலை ஐயப்ப சுவாமி  கோவிலுக்கும் பழனிக்கு பாதயாத்திரையாக செல்லும் முருக பக்தர்கள்  விரதமிருந்து செல்வதற்கு   விரதமாலை அணிந்து கொண்டனர்.

சின்னப்ப நகரிலுள்ள ஐயப்பன் கோவிலில் ஸ்ரீ காளீஸ்வரகுருக்கள்  அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி  திருக்கோவிலில்  பாலு அய்யர் விரத மாலை அணிவித்தனர். தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் முருக பக்தர்கள் ஐயப்ப  பக்தர்கள்  மிகக்குறைந்த பக்தர்கள்தான் விரதமாலை அணிந்து கொண்டனர்.  கார்த்திகையை சோமவாரத்தை முன்னிட்டு  மூலவர்  உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாதிதனர்  பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசினம் செய்தனர்.

Top