logo
ஈரோடு மாவட்டத்தில் 19 லட்சத்து 16 ஆயிரத்து 809 வாக்காளர்கள் உள்ளனர்- ஆட்சியர் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் 19 லட்சத்து 16 ஆயிரத்து 809 வாக்காளர்கள் உள்ளனர்- ஆட்சியர் தகவல்

16/Nov/2020 03:11:43

ஈரோடு மாவட்டத்தில் உள்ள   சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 19 லட்சத்து 16 ஆயிரத்தி 809 வாக்காளர்கள்  வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ளனர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் தலைமையில்  (16.11.2020) இன்று  நடைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் ஈரோடு மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் வெளியிட்டார். அதை ஈரோடு மாநகராட்சி  ஆணையர் மா. இளங்கோவன் பெற்றுக்கொண்டார்.

ஈரோடு கிழக்கு ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, பவானிசாகர் ஆகிய 8  தொகுதிகளை  கொண்ட ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 19 லட்சத்து 16 ஆயிரத்து 809 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் 9,36,022, பெண் 9,80,414 இதர 95 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட 44 ஆயிரத்து 392 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

ஈரோடு மாவட்டம் முழுவதும் மொத்தம் 926 இடங்களில் 2,215 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த பட்டியல் அனைத்து வாக்குசாவடிகள், வட்டாச்சியர், கோட்டாச்சியர் அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

பெயர் சேர்த்தல் நீக்கல் உள்ளிட்ட பணிகளுக்கு வரும்  21, 22 மற்றும்  12.12.2020 மற்றும் 13.12.2020 ஆகிய 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். அதில் பொதுமக்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சரிபார்த்து கொள்ள வேண்டுமென ஆட்சியர் கதிரவன் தெரிவித்தார். இதில்,டிஆர்ஓ கவிதா, ஆர்டிஓ சைபுதீன் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளில் நிர்வாகிகள்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Top