logo
புதுக்கோட்டை செஞ்சுரி  லயன்ஸ் சங்கம் சார்பில்  ஏழைபெண்ணின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி

புதுக்கோட்டை செஞ்சுரி லயன்ஸ் சங்கம் சார்பில் ஏழைபெண்ணின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி

11/Nov/2020 04:52:39

புதுக்கோட்டை  செஞ்சுரி  லயன்ஸ் சங்கம் சார்பில்   பெண்ணுக்கு மருத்துவ உதவி   வழங்கும் நிகழ்ச்சி நியூ மோடி பேட்மிட்டன்கிளப் வளாகத்தில் இன்று(11.11.2020) நடைபெற்றது.

சங்கத்தலைவர்  புவனேஸ்வரி தங்கமாளிகை எஸ். நடராஜன் தலைமை வகித்து  புதுக்கோட்டை, ராஜகோபாலபுரத்தை  சேர்ந்த  பழவண்டி வியாபாரியின் மனைவி பத்மலெட்சுமியின் புற்று நோய் சிகிச்சைக்காக, சங்க உறுப்பினர்கள் மூலம் கிடைத்த நிதி ரூ.50 ஆயிரத்தை வழங்கிப் பேசுகையில், புதுக்கோட்டை  செஞ்சுரி  லயன்ஸ் சங்கம் தொடர்ந்து  சிறந்த  திட்டங்களை  செயல்படுத்தி  வருகிறது. விரைவில் கண்தான நிகழ்ச்சி, கண் மருத்துவ முகாம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், தற்போது கொரோனா  வைரஸ் தொற்று நோயிலிருந்து அனைவரும்   மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும்  என்றும் குறிப்பிட்டார்.

இதில்,  சங்க  நிறுவனர் கண்ணன் மற்றும் சங்க தலைவர் உள்ளிட்டோர் சங்கத்தின் செயலாளர் ஏ.அரவிந்த் சேவையைப் பாராட்டி சால்வை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்தனர்.  டாக்டர் முத்துராஜா  முன்னிலை வகித்தார்.செயலாளர் ஏ.அரவிந்த் வரவேற்றார். பொருளாளர் சேது கார்த்திகேயன் நன்றி கூறினார்.

 இதில், செஞ்சுரி  லயன்ஸ் சங்க  நிர்வாகிகள் முன்னாள் தலைவர்கள் குமார்,தெட்சிணாமூர்த்தி  உள்பட பலர்  கலந்து கொண்டனர்.          


Top