logo
அனைத்து குடும்பத்திற்கும் முகக் கவசம்: ஊராட்சித் தலைவரின் மனிதாபிமான சேவை.

அனைத்து குடும்பத்திற்கும் முகக் கவசம்: ஊராட்சித் தலைவரின் மனிதாபிமான சேவை.

27/Apr/2020 11:26:12

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சியில் கொரோனா தொற்றில் இருந்து மக்களை தற்காக்கும் வகையில்  அனைத்து குடும்பத்தினருக்கும் முக கவசங்களை வழங்கிவருகிறார் ஊராட்சித் தலைவர் எஸ். மணிகண்டன்.அவரது சேவையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா தொற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், முக கவசங்களை அணியவும் அறிவுறத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில்,முகக்கவசங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.மேலும்,முகக் கவசங்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.அதனால்,ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து,வீட்டிலேயே முடங்கியுள்ள சாமானிய மக்கள் முகக் கவசங்களை வாங்கி பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான், ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சியில் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் இலவசமாக முக கவசங்களை வழங்கிவருகிறார் அந்த ஊராட்சியில் தலைவர் எஸ்.மணிகண்டன். அவர், இதுவரை 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட முக கவசங்களை தயார் செய்து,ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் மூலம் அந்த ஊராட்சியில் உள்ள குடும்பங்களுக்கு வீடு வீடாக சென்று வழங்கி வருகிறார்.  ஊராட்சித் தலைவர் மணிகண்டனின் மனிதாபிமான மிக்க சேவையை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Top