logo
தமிழகம், கேரளம் உள்ளிட்ட  தென்மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை- வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம், கேரளம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை- வானிலை ஆய்வு மையம் தகவல்

29/Oct/2020 11:43:27

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

தமிழகம், கேரளம்  உள்ளிட்ட தென் இந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பரவலாக மழை பெய்து வருகிறது இன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், நெல்லை, விருதுநகர் தென்காசியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை கனமழை பெய்தது. இன்றும் தொடர்ந்து மழை பெய்து  வருகிறது. 

2017 நவம்பருக்கு பிறகு சென்னையில் குறைந்த நேரத்தில் அதிக அளவு மழை பதிவாகி உள்ளது. பெரும்பாலான சாலைகளில் தண்ணில் குளம் போல் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் மழைநீர் வடிகால் பாதைகளை அடைத்திருப்பதால்ண்ணீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 மழை நீரை  வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் கனமழை   தொடர்பாக மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி  காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் கனமழை  தொடரும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இந்த நிலையில், சென்னையில் நள்ளிரவு முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அண்ணா நகர், தியாகராய நகர், ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி, எழும்பூர், ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்தது.கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், தங்களது வாகனத்தை இயக்க முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர் . இதையடுத்து 

 சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த  சில மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்றும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Top