27/Oct/2020 09:56:14
புதுக்கோட்டை மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டையில் அண்ணாசிலை அருகில் மாவட்ட தலைவர் முகமது னி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள்எழுப்பினர்.