logo
ஈரோட்டில் காணொளி மூலம்  முதன்முறையாக  நடந்த விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம்

ஈரோட்டில் காணொளி மூலம் முதன்முறையாக நடந்த விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம்

27/Oct/2020 05:18:23

ஈரோடு: மாதந்தோறும்  ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை கேட்பு கூட்டம்  கொரோனா நோய் தொற்று  காரணமாக நடத்தப்படாமல் இருந்த நிலையில்,  முதன் முறையாக காணொலி காட்சி மூலம் குறைகேட்புக் கூட்டம் இன்று நடத்தப்பட்டது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து கோட்டாட்சியர் அலுவலகங்கள் வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள வேளாண்விரிவாக்க மையங்களில் ஏற்பாடு  இந்த காணொலி நிகழ்வில்,அனைத்து பகுதிகளைச் சார்ந்த விவசாயிகள் பெரும்பாலோனர்கள் கலந்து கொண்டு  குறைகள் மற்றும் கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். 

இக்கூட்டத்தில்,  கோபிசெட்டிபாளையம்   கள்ள சந்தையில் விலைபோகும் மஞ்சளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

அனைத்து பகுதிகளிலிருந்தும் பங்கேற்ற விவசாயிகள் குடிமாரமத்து பணிகள் பாசன வாய்க்கால்கள் சீரமைப்பு நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள குறைபாடுகள் விதை கொள்முதல் மற்றும் விற்பனை போன்றவற்றில் உள்ள குறைபாடுகளை விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துரைந்தனர். 

பெரும்பாலான விவசாயிகள் மஞ்சள் ஏற்றுமதியை ஊக்குவிக்க வேண்டும் என்றும் இலங்கையில் மஞ்சள் விற்பனை கள்ளசந்தையில் விற்பனை செய்யப்படுவதையும் தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்படும் மஞ்சளுக்கு 100 கிலோவிற்கு ஒரு கிலோ தங்கம் பெறுவதையும் சுட்டிக்காட்டினர். அதனால் இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் மஞ்சள் தேவை அதிகரித்துள்ளதாகவும் தமிழகத்தில் ஈரோடு உட்பட பல மாவட்ட மஞ்சள் விவசாயிகள் மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்காமல் பல ஆண்டுகளாக இருப்பு வைத்து காத்திருப்பதாகவும் அதனால் தமிழக அரசு மஞ்சள் ஏற்றுமதிக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மஞ்சள் சாகுபடி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர். 

கோபிசெட்டிபாளையம் வேளாண் விரிவாக்க மையத்தில் நடைபெற்ற காணொலி கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கோபிசெட்டிபாளையம் மற்றும் நம்பியூரில் அமைக்கப்படும் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைத்திற்கு அனுமதியளித்து நிதி பெற்றுத்தந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டைனுக்கும் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனுக்கும் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

கடந்த மாதங்களில் கொரோனா நோய் தெற்று தடுப்பு நடவடிக்கையால் வேளாண் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறாமல் இருப்பதை விவசாயிகள் சுட்டிக்காட்டிவந்த நிலையில் தற்போது காணொலி மூலம் நடத்த ஈரோடு மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு இந்தக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. 


Top