26/Oct/2020 08:13:01
பெண்களுக்கு எதிரான கருத்துக்களை கூறிய திருமாவளவனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றார் பாஜக பாஜக முன்னாள் தேசியச் செயலர் எச்.ராஜா.
புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூரில்
திங்கள்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம்
கூறியது:இந்து மதத்தில் தான் பெண்களை தெய்வமாக கருதி வழிபாடு நடத்துகிறோம். குறிப்பாக நவராத்திரி நாட்களில் மூன்று நாள் லட்சுமி மூன்று நாள் சரஸ்வதி மூன்று நாள் துர்க்கையை வழிபட்டு வருகின்றோம். நவராத்திரியின்போது, இந்து மதத்தை இழிவு படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு பெண்கள் குறித்த கருத்தை ஸ்டாலின் தூண்டுதலின் பேரில் திருமாவளவன் பேசியுள்ளார். இந்தப் பிரச்னை தேர்தல் நேரத்தில் கடுமையாக எதிரொலிக்கும்.ஆனால், இஸ்லாமிய மதத்திலும் கிறிஸ்துவ மதத்தில் பெண்கள் அடிமைகளாக தான் இன்றுவரை உள்ளனர். கார்ட்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்த தமிழக அரசு ஏன் இதுவரை திருமாவளவனை கைது செய்யவில்லை. அவரை
உடனே கைது செய்ய வேண்டும் என்றார்.