logo
சாலை விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவ உதவி செய்த புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சித் தலைவர்

சாலை விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவ உதவி செய்த புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சித் தலைவர்

26/Oct/2020 08:10:38

புதுக்கோட்டை மாவட்டம் கூழையான் விடுதி பிரிவு சாலை அருகே சொகுசு வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிய நபரை மீட்டு மருத்துவ உதவி கிடைக்க ஏற்பாடு செய்தார் புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சித்தலைவர் ஜெயலட்சுமி. 

சாலை விபத்து நடந்த சிறிது நேரத்தில் அப்பகுதி வழியாக தன்னுடைய காரில் வந்த புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி குழு தலைவர்  ஜெயலட்சுமி தன்னுடைய காரில் இருந்து இறங்கி அடிபட்ட நபருக்கு உடனடியாக உதவிகளை செய்தார் மேலும், 108 ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு போன் செய்தும் மருத்துவர்களுக்கு போன் செய்தும் காவலர்களுக்கும் தகவல்  கொடுத்தார்.

இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் சிறிது தாமதம் ஆனதால் மாற்று வாகனத்தை தயார் செய்து அவரை உடனடியாக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் அவரை பின்தொடர்ந்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.

தக்க நேரத்தில் உயிருக்கு போராடிய நபரை காப்பாற்றி மருத்துவ உதவி வழங்கியதும் அவருடைய உயிர் தற்போது காப்பாற்றப்பட்டு இருக்கிறது இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயலட்சுமி மற்றும் அவருடைய கணவர் தமிழ்செல்வன் கவுன்சிலர் சரவணன் ஆகியோருக்கு தங்களுடைய நன்றியை தெரிவித்து கொண்டனர்.

இந்நிகழ்வுகளை பார்த்த அவ்வழியாகச் சென்ற பொதுமக்களும் கிராம மக்களும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயலட்சுமிக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

Top