logo
தலையில் பலத்த ரத்த காயங்களுடன் கிடந்த நபர் குறித்து ஈரோடு டவுன் போலீசார் தீவிர விசாரணை

தலையில் பலத்த ரத்த காயங்களுடன் கிடந்த நபர் குறித்து ஈரோடு டவுன் போலீசார் தீவிர விசாரணை

26/Oct/2020 07:58:35

ஈரோடு பேருந்து நிலையத்தில் தலையில் பலத்த ரத்த காயங்களுடன் கிடந்த நபர் குறித்து ஈரோடு டவுன் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு பேருந்து நிலையத்தில் கடந்த 22-ஆம் தேதி பிற்பகலில் தலையில் அடிபட்டு தலையில் ரத்த காயங்களுடன் மயக்க நிலையில் ஒரு நபர் கிடந்தார். அவரை மீட்ட ஈரோடு டவுன் போலீஸார், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக அவர், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தலையில் அடிபட்ட நிலையில் கிடந்த நபர் யார்? எந்த ஊரை சேர்நத்வர் என்பது குறித்த விவரம் தெரியவில்லை.

தகவல் அறிந்தவர்கள் ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் 9498132868, எஸ்.ஐ. 94981 76011, டவுன் போலீஸ் ஸ்டேஷன் 94981 01231 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என போலீஸார் அறிவித்துள்ளனர்

Top