26/Oct/2020 07:21:57
சென்னை: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. எக்மோ கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் 90% நுரையீரல் பாதிப்பிற்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையை மருத்துவர் குழு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அமைச்சர் துரைக்கண்ணு உடல் நிலை குறித்து நேற்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நேரில் நலம் விசாரித்துள்ள நிலையில், இன்று, அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர்,தங்கமணி, சி.வி. சண்முகம், ஆர். காமராஜ், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் சென்னையிலுள்ள காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நிலை குறித்து விசாரித்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.