26/Oct/2020 06:15:49
ஈரோடு மாவட்டத்தில் ஆயுத பூஜையையொட்டி பூக்கள் மற்றும் பழ விற்பனைகள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்த அளவே விற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
அதன்படி நேற்று நடைபெற்ற ஆயுத பூஜை விழாவையொட்டி குண்டு மல்லி கிலோ ரூ.800, முல்லை ரூ.800 , சம்பங்கி ரூ.300 முதல் 500 வரையும், ஜாதி மல்லி ரூ.360-க்கும் விற்பனையானது.
நேற்று ஒரு நாள் மட்டும் ரூ.50 லட்சத்துக்கு பூக்கள் விற்பனை ஆனது. கடந்த ஆண்டை விட இது குறைவுதான். இதேபோல் ஆயுத பூஜையையொட்டி வாழைப்பழம் ஆப்பிள் மாதுளை ஆரஞ்சு கொய்யா என மாவட்டம் முழுவதும் 50 டன் பழங்கள் விற்பனைக்கு வந்தன. ஆனால் 25 டன்னுக்கு மட்டுமே பழங்கள் விற்பனை ஆயின. அதாவது 30 லட்சத்துக்கு மட்டுமே விற்பனையானது. இது கடந்த ஆண்டை விட 40 சதவீதம் குறைவு என வியாபாரிகள் தெரிவித்தனர்.