logo
ஆலங்குடி அருகே 600 லி கள்ளச்சாராய ஊறல் பறிமுதல்: ஒருவர் கைது.

ஆலங்குடி அருகே 600 லி கள்ளச்சாராய ஊறல் பறிமுதல்: ஒருவர் கைது.

24/Apr/2020 05:10:54

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 600 லி ஊறல்களை  போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


ஆலங்குடி அருகேயுள்ள கடுக்காகாடு, கருக்காகுறிச்சி பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, வடகாடு காவல் ஆய்வாளர் பரத் ஸ்ரீநிவாஸ் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார். அப்போது, கடுக்காகாடு பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் அதே பகுதியைச் சேர்ந்த ஆ.செல்வராஜ் (59) என்பவர் சாராயம் காய்ச்சுவதற்காக புதைத்து வைத்திருந்த சுமார் 200 லி ஊறல்கள் பறிமுதல் செய்து அழித்தார். தொடர்ந்து, செல்வராஜை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

 இதேபோல, கருக்காகுறிச்சி பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போது, அப்பகுதியில் உள்ள புள்புதர்களுக்கு இடையே சாராயம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 400 லி ஊறல்களை பறிமுதல் செய்து, அவற்றை அழித்ததோடு தப்பியோடிய மர்ம நபர்களா தேடி வருகிறார்.

Top