26/Oct/2020 05:52:17
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை ஏறுவதும் இறங்குவதுமாக நிலையில்லா தன்மை உடையதாக இருந்தது.
சுகாதாரத்துறையினர் நேற்று வெளியிட்டுள்ள புள்ளி விவரப்பட்டியல்படி, மாவட்டத்தில் மேலும் 76 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 9,724 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் பாதிப்பிலிருந்து 93 குணமடைந்து வீடு திரும்பினர். மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 8,785 ஆக உயர்ந்தது. 817 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று கொரோனாவால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்த 63 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 119 ஆக உயர்ந்துள்ளது.
முதியோர்கள் வசிக்கும் வீட்டில் உள்ளவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் அவர்களை தேவை இல்லாமல் வெளியே அனுப்ப வேண்டாம் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதைப்போன்று இருமல் காய்ச்சல் சளி போன்ற அறிகுறி இருந்தால் அவர்களை தாமதிக்காமல் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.