25/Oct/2020 10:10:04
திருப்பத்தூர்: மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட இடத்தில் உள்ள நினைவுத்தூணுக்கு தமிழக துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் தலைமையில் அமைச்சர்கள் சனிக்கிழமை(அக்.24) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேருந்து நிலையம் எதிரே சிவகங்கைச்சீமையின் மாமன்னர்கள் மருதுபாண்டியர் வெள்ளையர்களால் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட இடத்தில அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூணுக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், செய்தி,விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், கிராம தொழில்த்துறை அமைச்சர் பாஸ்கரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை. அணிவித்து மரியாதை செலுத்தினர்.