logo
கோபிசெட்டிபாளையம் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்

கோபிசெட்டிபாளையம் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்

25/Oct/2020 08:38:49

ஈரோடு:கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொங்கர்பாளைத்தில் கடந்தவாரம் தீவிபத்தில் வீடுகள் சேதமடைந்த இரு குடும்பங்களுக்கு வேட்டி சேலை அரிசி பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களுடன் தலா ரூ.9,500 ரொக்கத்தையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  வழங்கினார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொங்கர்பாளைத்தில் கடந்த வாரம் பழனிச்சாமி மகாளி ஆகிய 2   பேரது து வீடுகளிலும் ஏற்பட்ட தீவிபத்தில் வீட்டு உபயோகப்பொருட்கள் உட்பட ஆயிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரித்து சேதமடைந்தது. அந்த இரு குடும்பங்களுக்கும் வேஷ்டி, சேலை, அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப்பொருட்களுடன் அரசு சார்பில் ரூ.4,500 ரொக்கமும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் சொந்தப்பணம் ரூ.5 ஆயிரம் என ரூ.9.500 ரொக்கத்தையும் தலா இரு குடும்பங்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.

 முன்னதாக கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் சென்னியப்பன், மாவட்ட உழவர் விவாதக்குழு தலைவர் நஞ்சப்பன், செயலாளர் வெங்கடாசலபதி, நுகர்வோர் அமைப்பு பெருமாள் கார்த்தி, மற்றும் மாணிக்கசுந்தரம் ஆகியோர் அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து நம்பியூரில் ரூ.2.54 கோடியிலும் கோபிசெட்டிபாளையத்தில் ரூ.2.2 கோடி மதிப்பீட்டிலும் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தற்கு அமைச்சரை பாராட்டி நன்றி தெரிவிக்கும் வகையில் சால்வை அணிவித்தனர். 


Top