logo
ஆலங்குடியில் மாணவி இறப்பு குறித்து விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்.

ஆலங்குடியில் மாணவி இறப்பு குறித்து விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்.

24/Oct/2020 07:19:59

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் தூக்கிட்ட நிலையில் பள்ளி மாணவி உயிரிழந்தது தொடர்பாக உரிய விசாரனை நடத்த வலியுறுத்தி இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  ஆலங்குடியில் வடகாடு முக்கம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச்செயலர் பாலசுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் மணி, லெனினிஸ்ட் நகரச்செயலர் சரவணன், விடுதலை சிறுத்தைகள் நகரச்செயலர் சக்திவளவன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், ஆலங்குடி அருகே கும்மங்குளத்தில் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்து கிடந்த பள்ளி மாணவி அபிநாயவின் இறப்பு குறித்து உரிய விசாரனை நடத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச்செயலர் ஆர்.சொர்ணக்குாமர், மாதர் சங்க ஒன்றியச்செயலர் மணிமேகலை,  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Top