logo
புதுக்கோட்டை வந்த தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

புதுக்கோட்டை வந்த தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

22/Oct/2020 01:42:51

புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (அக்.22) நடைபெற உள்ள கரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டத்துக்கு வந்த தமிழக முதல்வருக்கு பல்வேறு இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு பணி ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு இன்று விமானம் மூலம் வந்தார். பின்னர், அங்கிருந்து கார் மூலம் விராலிமலை வந்தார். அங்கு, மக்கள்நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அங்குள்ள ஐடிசி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு பிரிவை திறந்து வைத்தார். பின்னர், ஜல்லிக்கட்டு காளையை வீரர் ஒருவர் அடக்குவது போன்ற உலோக சிலையை திறந்து வைத்துப் பேசினார். இலுப்பூர் பேருந்து நிலையம் அருகே 100 அடிக் கொடிக்கம்பத்தில் கொடியேற்றினார். புதுக்கோட்டை அருகே கவிநாடு கண்மாய் பகுதிக்கு வந்த தமிழக முதல்வருக்கு காவிரி-குண்டாறு திட்டத்துக்கு நிதி ஒதுக்கி, பணிகளைத் தொடங்கி உள்ளதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 250 மாட்டுவண்டிகள், முளைப்பாரிகளோடு விவசாயிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆட்சியரகம் வந்த அவருக்கு ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி வரவேற்பு அளித்தார். அங்கு, அரசின் திட்டங்களை விளக்கும் விதமாக வைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டார். ரூ.29 புதிய பணிகளுக்கு ரூ.210 கோடியில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். ரூ.54 கோடியில் முடிவுற்ற 48 பணிகளை திறந்து வைத்தார். நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின்னர், பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.இதில், அமைச்சர்கள், அரசு செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Top