logo
பெண்ணிடம் 10 பவுன் சங்கிலியை இரண்டு சக்கர வாகனத்தில் வந்து திருடிய நபர் கைது

பெண்ணிடம் 10 பவுன் சங்கிலியை இரண்டு சக்கர வாகனத்தில் வந்து திருடிய நபர் கைது

21/Oct/2020 05:34:56

அறந்தாங்கி: ஆவுடையார்கோவில் காவல் நிலையத்துக்குள்பட்ட துரையரசபுரம் அருகே பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர்,


ஆவுடையார் கோவிலில் இருந்து அறந்தாங்கிக்கு சென்ற பெண்ணை பின்தொடர்ந்து சென்ற இரு இளைஞர்கள்  துரையரசபுரம் அருகில் சமத்துவபுரம் என்ற இடத்தில் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.  இது தொடர்பாக ஆவுடையார்கோவில் காவல்துறையினர் துரித நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் அந்த நபர்களை சம்பவம் நடந்த 12 மணி நேரத்தில் குற்றவாளியைக் கைது செய்து அப்பகுதி மக்களின் பாராட்டைப் பெற்றனர்.

  செயின் பறிப்பு வழக்கில் தேடப்பட்ட கார்கமங்களம்  கிராமத்தைச் சேர்ந்த  டெக்ஸ்ட் அரவிந்தன் (26) என்பவரை ஆவுடையார்கோவில் போலீஸார் கைது செய்து பல்வேறு இடங்களில் திருடிய 20 பவுன் நகையை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.இந்த குற்றவாளிகளை காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் காவல்துறையினர் துரிதமாகச்செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்தனர்.

Top