logo
மயானத்தை ஆக்கிரமித்ததாக புகார் தெரிவித்து ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணா

மயானத்தை ஆக்கிரமித்ததாக புகார் தெரிவித்து ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணா

19/Oct/2020 11:23:18

ஈரோடு மாவட்டம், நம்பியூர் அடுத்த வெள்ளாளபாளையம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இன்று ஈரோடு  ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தபோது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி ஒரே நேரத்தில் இவ்வளவு பேர் உள்ளே செல்ல அனுமதி இல்லை முக்கியமானவர்கள் மட்டும் செல்லுங்கள் என்று அறிவுறுத்தினர்.

இதனால் கிராம மக்களுக்கும் போலீஸாருக்கு இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் திடீரென  ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்  கூறியதாவது:  எங்கள் பகுதியில் நாங்கள் 300-க்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். எங்கள்  பகுதியில் உள்ள சுடுகாட்டை நாங்கள் காலம் காலமாக பயன்படுத்தி வருகிறோம்.  மயானம் 1.33 ஏக்கர் பரப்பளவில்  உள்ளது.  கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் மயானத்தின்  75 சென்ட் அளவு நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகிறார்.

இதுகுறித்து வருவாய் துறை அலுவலர்களுக்கு நாங்கள் புகார்  ய்தோம்.அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து நிலத்தை அளந்து சென்றனர்.

 இந்நிலையில், கடந்த மாதம் 30-ஆம் தேதி எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்துவிட்டார். அவரை அடக்கம் செய்ய மயானத்தில் சென்று பார்த்தபோது அதே நபர் மயானத்தை மீண்டும் ஆக்கிரமித்து  இருந்தார். இதைர் கண்டித்து நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். மறுநாள் நம்பியூர் வருவாய் வட்டாட்சியர், நம்பியூர் காவல் ஆய்வாளர் உட்பட அரசு அலுவலர்கள் ஆக்கிரமித்த பகுதி இழந்த கம்பி வேலியை அகற்றி இறந்த நபரை புதைக்க உதவி செய்தனர்.

 இந்நிலையில், பதினாறாம் நாள் சடங்கு செய்வதற்காக நாங்கள் மயானத்தை சென்று பார்த்தபோது இறந்த நபர் புதைத்த இடத்தில் அந்த ஆக்கிரமிப்பாளர் ஜேசிபி எந்திரம் மூலம் குழிதோண்டி உடலை அப்புறப்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தார். இதுகுறித்து நம்பி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

எனவே, நாங்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்த மயானத்தை எங்களிடம் மீண்டும் திருப்பி கொடுக்க வேண்டும். மயானத்தை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். தொடர்ந்து மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் நடத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. 


Top