logo

அதிமுக 49-ஆவது ஆண்டு தொடக்க விழா: ஈரோட்டில் அதிக இடங்களில் அன்னதானம்

18/Oct/2020 06:09:09

ஈரோடு: அதிமுக தொடங்கி 49-ஆவது ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு ஈரோடு கிழக்கு, மேற்கு தொகுதியில் அதிமுகவினர் உற்சாகத்துடன். கொண்டாடி வருகின்றனர்.

ஈரோடு மாநகர் மாவட்ட மாணவரணி சார்பில் 49-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பெரியசேமூர் அடுத்த தண்ணீர்பந்தல் பாளையம், பாளையம் பஸ் நிறுத்தம் அருகே பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 நிகழ்ச்சிக்கு, மாவட்ட மாணவரணி இணைச்செயலாளர் யுனிவர்சல் நந்தகோபால் தலைமை வகித்தார்.எம்எல்ஏக்கள் கே.வி. ராமலிங்கம், கே.எஸ். தென்னரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானத்தை தொடக்கி வைத்தார்.

 அதை தொடர்ந்து, பல்வேறு கட்சிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியில் இருந்து விலகி எம்எல்ஏக்கள் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் சூரம்பட்டி ஜெகதீஷ், கோவிந்தராஜ், தங்கமுத்து, மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் வீரகுமார், மாரிமுத்து, ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Top