17/Oct/2020 04:10:39
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் மலம்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் தோழர் அந்தோணிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற ஒன்றிய குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விராலிமலை ஒன்றியம் இலுப்பூர் தாலுகாவில் பாக்குடி கிராமத்தில் 2007 -ஆம் ஆண்டு நிலமற்ற ஏழைகளுக்கு இலவசமாக நிலம் வழங்கும் திட்டத்தில் (சர்வே எண் 217 /1) இலவசமாக கொடுக்கப்பட்ட பட்டாக்களை கிராம கணக்கில் இதுவரை ஏற்றாமல் உள்ளது. எனவே, வருவாய் துறை நிர்வாகம் உடனடியாக மேற்படி நிலங்களை கிராம கணக்கில் ஏற்றி தர வேண்டும் என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது
கட்சியின் மாவட்ட செயலாளர் மு மாதவன் அரசியல் நிலை குறித்து விளக்கிப் பேசினார். மாநிலக்குழு உறுப்பினர் கே.ஆர். தர்மராஜன் மாவட்ட குழு முடிவுகளை விளக்கி பேசினார். மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் பாலச்சந்திரன் தீர்மானங்களை விளக்கி பேசினார் .ஒன்றிய செயலாளர் உ. கருப்பையா நடந்துள்ள வேலைகள் குறித்து அறிக்கை வைத்தார் கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஐயாத்துரை கருப்பையா வாசுகி மணி குமாரசாமி உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்றார்கள்