16/Oct/2020 03:47:47
புதுக்கோட்டை: அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாகப் பிக்கப்படும் என்ற துணைவேந்தர் சூரப்பாவின் தன்னிச்சையான அறிவிப்பைக் கண்டித்தும், அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.ஓவியா பேசினார். நிர்வாகிகள் நித்தீன், கார்த்திகா, கார்த்திக், குரோஷி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.