logo
புதுகை நகராட்சிப்பள்ளியில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா

புதுகை நகராட்சிப்பள்ளியில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா

15/Oct/2020 11:26:00

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை நகராட்சி சந்தப்பேட்டை நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாமின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

புதுக்கோட்டை நகராட்சி சந்தைப்பேட்டை நடுநிலைப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த அப்துல் கலாம் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. நிகழ்ச்சியில் வல்லத்திரக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி ஆங்கில முதுகலை ஆசிரியர் ஆண்டனி புதுக்கோட்டை சந்தப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு 10 -க்கும் மேற்பட்ட தேசத் தலைவர்கள் மற்றும் அப்துல் கலாம் அவர்கள் எழுதிய அக்னி சிறகுகள் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை மாணவர்கள் பயன்பெற ஏதுவாக பள்ளி தலைமை ஆசிரியர்  விஜய மாணிக்கத்திடம் வழங்கினார்.

இதில், ஆசிரியர்கள் ரவிச்சந்திரன், பாஸ்கர், ஸ்டெல்லா மேரி, கீதா ஆகியோர் உடனிருந்தனர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப் படாமல் இருக்கும் நிலையில் ஆசிரியர்கள் மட்டுமே தற்போது ஆன்லைனில் வகுப்புகளை எடுத்து  வருகின்றனர்.

அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு  அரசு பள்ளியில் அவருடைய உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து புத்தகங்கள் வழங்கி சமூக இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணிந்து கொண்டாடியது ஆசிரியர்கள் மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது

Top