logo
தூய்மை இந்தியா திட்டத்தை முனனெடுப்பதில் பின்னடைவு- சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை

தூய்மை இந்தியா திட்டத்தை முனனெடுப்பதில் பின்னடைவு- சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை

15/Oct/2020 07:14:45

நமது பிரதமர் குப்பை எடுத்த செய்திகள். பாராட்டுகள் ஒரு பக்கம் ,கிண்டல்கள் மறுபக்கம். நம்ம கருத்தை யாரு கேட்பார்கள்  சொல்லித்தான் வைப்போமே என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

நமது பிரதமர்  தூய்மை இந்தியா திட்டத்தை பேசுகின்ற அளவிற்கு அவர் சார்ந்த கட்சி உறுப்பினர்கள் பேசுவதில்லை செயல்படுத்துவதில்லை. அமித் ஷா எங்களது கட்சியில் இத்தனை கோடி உறுப்பினர்கள் உள்ளனர் என்று பெருமை பேசுகிறார்.

அத்தனை கோடி உறுப்பினர்களையும் களத்தில் இறக்கினால் சில நாட்களிலேயே இந்தியா தூய்மையாகிவிடும். ஆகவே நம் பிரதமர் முதலில் செய்ய வேண்டியது தனது கட்சிக்காரர்களை  ஆத்மார்த்தமாக இந்த தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்த தூண்டுவதாகும்.

மற்றொரு பக்கம் நாமெல்லாம் பொறுப்புள்ள குடிமக்கள் தானா என்ற கேள்விறு நம் முன்னே வைத்து முன்னாள் குடியரசு தலைவர் கலாம் அவர்கள் 25. 01. 2006 ஆற்றிய உரையை நினைவூட்ட வேண்டியிருக்கிறது. அந்த உரையில் சொல்லுவார், ஒரு இந்தியனை சிங்கப்பூருக்கு கொண்டு செல்லுங்கள். அவனுக்கு ஒரு பெயரைக் கொடுங்கள். உங்களுடைய பெயரையே சூட்டுங்கள். அவனுக்கு ஒரு முகத்தைக் கொடுங்கள். உங்களுடைய முகமாகவும் இருக்கலாம்.

நீங்கள் தெருவில் சிகரெட் துண்டையோ, பீடித் துண்டையோ விட்டேற்றியாக வீசியெறியமாட்டீர்கள். சர்வ சாதாரணமாக எச்சில் துப்ப மாட்டீர்கள். அந்த நாட்டு மக்களைப் போலவே அந்த நாட்டின் சாலைகள் குறித்து நீங்களும் பெருமை பட்டுக் கொள்வீர்கள். ஆஸ்திரேலியாவிலும், நியுஸிலாந்திலும் முழுப்பூசணிக்காயையோ, தேங்காயையோ உடைத்து சாலையில் வீசத் துணிய மாட்டீர்கள். குப்பைக் கூடையில் தான் போடுவீர்கள். டோக்கியோ நகரத்து வீதிகளில் வெத்தலைப் பாக்குச் சீவலை குதப்பிக் கொண்டும் துப்பிக் கொண்டும் திரிவீர்களா மாட்டீர்கள்.

மற்ற நாடுகளின் சட்ட திட்டங்கள், நெறிமுறைகள், கட்டுப்பாடுகள் போன்ற எல்லாவற்றையும் ஏன், எதற்கு என்று கேட்காமல் உங்களால் பேணி நடக்க முடிகின்றது. ஆனால் சொந்த நாட்டில் அவ்வாறு நடக்க முடியாதது ஏன்.

இந்திய மண்ணில் கால் பதிந்ததும் எச்சில் துப்பவும் மூக்குச் சிந்தவும் தானாகத் தோன்றுவது ஏன். தெருவில் குப்பையை வீசவும் சிகரெட் துண்டுகளை வீசியெறியத் தொடங்கி விடுவதேன். அந்நிய நாட்டில் பொறுப்புள்ள குடிமகனாக உங்களால் வாழ முடிகின்றது. அது போன்று இந்தியாவிலும் உங்களால் ஏன் வாழ முடியாது.

 உலகத்திலேயே முதன் முதலில் சுகாதாரத்தை சொல்லிக் கொடுத்த நாகரீகம் என்று சிந்து சமவெளி நாகரீகம் (இனி கீழடி என்று சொல்லலாம்) என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் சுற்றுப்புறத்தை தூய்மையாகப் பேன  கற்றுக் கொடுத்திருக்கிறோமா? மகாத்மா காந்தி சம்பராணில் 1917-இல் தொடங்கிய தூய்மைப்பணி ஒரு நூற்றாண்டை கடந்தும் பாதி கூட நிறைவேறவில்லை.

படித்தவர்கள் நிறைந்துள்ள ஒரு அரசு அலுவலகத்திற்கு சென்று பாருங்கள் எவ்வளவு அழகாக அதை வைத்திருப்பார்கள் என்றுஇந்த தேசம் அழகுற வேண்டுமென்றால் ஒவ்வொருவரும் தனது பங்களிப்பை அர்ப்பணிப்போடு செய்ய வேண்டும் வரும் தலைமுறையாவது அழகான இந்தியாவைப் பார்க்கட்டுமே என்பதுதான் சமூக ஆர்வலர்களின் வேதனை கலந்த எதிர்பார்ப்பு

Top