logo
ஈரோட்டில் கார் மோதியதில் அரசு பேருந்து ஓட்டுநர் பலி

ஈரோட்டில் கார் மோதியதில் அரசு பேருந்து ஓட்டுநர் பலி

11/Oct/2020 02:27:29

ஈரோடு:ஈரோடு மாவட்டம், சென்னிமலை மேற்கு தலவுமலை பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் ரமேஷ்(44). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஈரோடு ஈ1 கிளையில் நகர்ப்பேருந்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு பணி முடிந்து, மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு ரமேஷ்  சென்று கொண்டிருந்தார்.

கஸ்பாபேட்டை வாய்க்கால் பாலம் அருகே சென்றபோது, பூந்துறையில் இருந்து ஈரோடுக்கு வந்த கார்  கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில்,படுகாயம் அடைந்த ரமேஷை அருகிலிருந்தோர்  மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஓட்டுநர்  ரமேஷ் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  உயிரிழந்த ரமேஷிற்கு,  மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

Top