25/Apr/2021 08:55:58
ஈரோடு, ஏப்: முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதை யொட்டி சனிக்கிழமை காய்கறி கடைகள் மளிகை கடைகள்,மீன் கடைகள் இறைச்சிக் கடைகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
ஈரோடு வ உ சி . பூங்கா பகுதியில் பெரிய மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.இங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள், 50 -க்கும் மேற்பட்ட பழ கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்தச் இரவு முழுவதும் மொத்த வியாபாரமும், காலை சில்லறை வியாபாரம் நடைபெறும். சாதாரண நாட்களில் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்வார்கள். இந்நிலையில் ஞாயிற் றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் முதல்நாளான சனிக்கிழமை காலை முதலே வ.உ .சி. பூங்கா பகுதியில் உள்ள பெரிய மார்க்கெட்டுக்கு மக்கள் அதிகளவில் வரத் தொடங்கினர்.
காய்கறி வாங்க வரும் பொதுமக்களுக்கு நுழைவாயிலில் கையில் கிருமி நாசினி தெளிக்கப் பட்டு உள்ளே அனுமதிக்கப்பட் டனர். குறிப்பாக பெண்கள் அதிக அளவில் வந்து வேண்டிய காய்கறிகளை வாங்கி சென்றனர். காய்கறி மார்க்கெட் பகுதியில் மாநகராட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அப்போது கடைகள் அடைக்கப்பட்டிருக்கும். இதை மீறி கடைகள் திறந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர்.
இதேபோல் ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டில் சனிக்கிழமை காலையில் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. மீன்களை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கும் வகையில் வட்டம் போடப் பட்டிருந்தது. அதில் வரிசையாக நின்று மக்கள் மீன்களை வாங்கிச் சென்றனர். இதைப்போல் கருங்கல்பாளையத்தில் உள்ள மீன் மார்க்கெட்டிலும் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப் பட்டது.
இதைப்போல் இறைச்சி கடைகளிலும் வழக்கத்தைவிட மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. இதேபோல் மளிகை கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட் டது.ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு என்பதால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மது பிரியர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.