09/Oct/2020 11:07:17
ஈரோடு: திண்டுக்கல் மாவட்டம் குறும்பட்டியை சேர்ந்த 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய வாலிபர் விடுதலை செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சிறுமிக்கு உரிய நீதி கிடைக்கும் வகையில் தமிழக அரசு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி ஈரோட்டில் இன்று(அக்.9) நடைபெற்றது.
ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு மருத்துவ சமூக நலச் சங்கம் மற்றும் தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தின் ஈரோடு மாவட்ட தலைவர் நாகராஜன், செயலாளர் வெங்கடேசன், தமிழர் கழக கட்சி மாவட்டச் செயலாளர் குணசேகரன், நிறுவனத் தலைவர் தமிழ்ச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இறந்த சிறுமியின் உருவப்படம் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து முடிதிருத்துவோர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியர்ர் அலுவலகத்திற்கு சென்று சிறுமிக்கு நீதி வேண்டி மனு கொடுத்தனர்.